Saturday, April 6, 2013

காரில் இன்டர்நெட் வசதியை பெறுவதற்கான புதிய வைஃபை சாதனம்: பிஎஸ்என்எல் அறிமுகம்

Bsnl Introduces Wi Fi Module Cars
காரில் செல்லும்போது தடையில்லா இன்டநெட் வசதியை பெறுவதற்கான புதிய வைஃபை சாதனத்தை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக இந்தூர் நகரில் இந்த புதிய சாதனம் சோதனை முறையில் தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தூர் சரக பிஎஸ்என்எல் பொதுமேலாளர் ஜிசி.பாண்டே காரில் இதற்கான வைஃபை சாதனம் பொருத்தப்பட்டு தற்போது சோதிக்கப்பட்டு வருகிறது. இந்த வைஃபை சாதனத்தை காரில் பொருத்துவற்கு ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை செலவாகும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. காரில் பொருத்தப்பட்டிருக்கும் சிடிஎம்ஏ தொழில்நுட்பம் கொண்ட சாதனம் ஆன்டெனா மூலம் சிக்னல்களை பெற்று இணைய வசதியை வழங்கும். காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போதே 3.5 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய வசதியை பெறலாம் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. இந்த வைஃபை சாதனத்துக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more at: http://tamil.drivespark.com/four-wheelers/bsnl-introduces-wi-fi-module-cars-004236.html

Thursday, March 28, 2013

விரைவில் சமந்தாவுடன் திருமணம்! - ஒருவழியாக ஒப்புக் கொண்ட சித்தார்த்


Sidahrd Talks About His Marriage With Samantha
சென்னை: விரைவில் சமந்தாவை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக நடிகர் சித்தார்த் ஒப்புக் கொண்டுள்ளார். நடிகர் சித்தார்த்தும், நடிகை சமந்தாவும், 'ஜபர்தஸ்த்' என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். ஆனால் திருமணத்துக்கு சமந்தா குடும்பத்தில் முதலில் எதிர்ப்பு எழுந்தாலும், சமந்தா பேசி சமாதானம் செய்து திருமணத்துக்கு சம்மதமும் வாங்கி விட்டார். அதைத்தொடர்ந்து சித்தார்த்-சமந்தா ஜோடி தங்கள் குடும்பத்தினருடன் காளஹஸ்தி கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டார்கள். இது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவிட, ரகசியம் அம்பலமாகிவிட்டது. முதலில் இந்த செய்தியை மறுத்த சித்தார்த் இப்போது, ஆமாம், அதற்கென்ன இப்போது... அது எங்கள் தனிப்பட்ட விஷயம் என்று கூறி வருகிறார். லேட்டஸ்ட் தகவல்படி சித்தார்த்-சமந்தா திருமணம் விரைவில் நடக்கவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளார் சித்தார்த். சமந்தாவும் புதிய படங்களை ஒப்புக் கொள்வதை குறைத்துவிட்டார். திரையுலகில் தனக்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் இந்த திருமண விஷயத்தை சொல்லி வருகிறார் சித்தார்த்.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/03/sidahrd-talks-about-his-marriage-with-samantha-172346.html

என்னைப் பயன்படுத்தாததால் நஷ்டம் ரஜினி, கமலுக்குத்தான்!- இளையராஜா

Ilayarajaa


சென்னை: வள்ளி, விருமாண்டி படங்களுக்குப் பிறகு ரஜினியும் கமலும் தங்கள் படங்களில் என்னைப் பயன்படுத்தாதது குறித்து நான் கவலைப்படவில்லை. அதனால் நஷ்டம் அவர்களுக்கே, என்று அதிரடியாகக் கூறியுள்ளார் இளையராஜா. ரஜினி, கமல் நடித்த அதிகபட்ச படங்களுக்கு இசை அமைத்தவர் இளையராஜா. இவர்கள் இணைந்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள் காலத்தை வென்றவை. இன்றும் புதிதாகவே இருப்பவை. ஆனால் ரஜினி கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்த வள்ளிக்குப் பிறகு, இருவரும் இணையவில்லை. இத்தனைக்கும் வள்ளியின் மிகப் பெரிய பலமாக நின்றது இளையராஜாவின் இசை. அதேபோல, கமல் இயக்கி நடித்த விருமாண்டிக்குப் பிறகு கமல் படங்களுக்கு இளையராஜா இசையமைக்கவில்லை. விருமாண்டியின் பெரிய பலமும் ராஜாவின் இசைதான். இதுபற்றி வார இதழ் ஒன்றில் வாசகர் கேள்விக்கு, இளையராஜா இப்படி பதிலளித்துள்ளார். "விருமாண்டி"க்கு பின் அவரும், "வள்ளி"க்குப் பின் இவரும் உங்களோடு சேரவில்லையே? அதுபற்றி எண்ணியதுண்டா ? என்னை வைத்துதான் இசையமைக்க வேண்டும் என எங்களுக்குள் எந்த ஒப்பந்தமும் கிடையாது. ஏன் அப்படி யாரிடமும் ஒப்பந்தம் போட்டது இல்லை. அவர்கள் இந்தப் படத்திற்கு "இளையராஜா"வின் இசை சரியாக இருக்காது என்று கணித்திருக்கலாம். ஆனால் அது தவறு என்று அவர்களுக்குத் தெரியாது. காரணம், நான் எந்தப் படத்திற்கு எந்த இடத்திற்கு எந்த மாதிரி இசையமைப்பேன் என்று என்னாலேயே கணிக்க முடியாது. பிறகு எப்படி மற்றவர்களால் அதை கணிக்க முடியும்? எனக்கு இந்த இசைதான் தெரியும் என்று யாரும் லேசில் எடை போட வேண்டாம். ஏனென்றால் எந்தக் காலத்துக்குள்ளும் என் இசை அடங்காது. என்னை வேண்டாம் என்பது அவர்கள் இஷ்டம். அதனால் நஷ்டம் அவர்களுக்கே. ஆனால் காலாகாலத்திற்கும் நின்றிருக்கும், நிலைத்திருக்கும் என் இசை. நெத்தியடி பதில்!

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/03/ilayarajaa-speaks-on-not-working-rajini-kamal-172360.html

Tuesday, February 28, 2012

Cricket


 


ஹோபார்ட் : இன்றைய முத்தரப்பு போட்டியில் போனஸ் புள்ளியுடன் இந்திய அணி வெற்றி பெற்றதால், இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. இன்னும் அடுத்த கட்டம் ஆஸியுடன் நடக்கும் போட்டியில் இலங்கை தோற்றால் இந்தியா இறுதி போட்டிக்கு செல்ல முடியும்.
இன்றைய போட்டியில் முதலில் களம் இறங்கிய இலங்கை அணி , இந்தியாவுக்கு 321 ரன் இலக்கு நிர்ணயித்தது. 40 ஓவருக்குள் 321 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, துவக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. ஆனால், சேவக் மற்றும் சச்சின் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், இந்திய அணி 37 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. கோஹ்லி அபாரமாக விளையாடி 84 பந்துகளில் 133 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.












சச்சின் 102 சதம் அடிப்பார் என்கிறார் கேரள ஜோதிடர் : நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் 100 அல்ல 102 சதம் அடிப்பார் என்றும், ஜோதிட கணக்குப்படி அவரது எதிர்காலம் மிக சிறப்பாக இருப்பதாகவும் கேரள மாநில பிரபல ஜோதிடர் தாமோதரன் கூறியுள்ளார். சச்சின் 100 சதம் அடிப்பாரா , இவர் எப்போது ஓய்வு பெற போகிறார் என்ற கேள்விகள் எழுந்திருக்கும் இந்த  வேளையில் சச்சின் ரசிகர்களுக்கு இந்த ஜோதிடம் சற்று திருப்தியை அளிக்கும் . பிரபல ஜோதிடர் தாமோதரன் கேரள மாநில அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். பின்னர் இவர் முழு நேர ஜோதிடராக மாறினார். இந்நிலையில் இவர் சச்சின் நிலை குறித்து ஆரூடம் கணித்து வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சச்சின்வரவிருக்கும் நாட்களில் பலம் வாய்ந்தவராக இருப்பார். அவர் அவசரப்பட்டு ராஜினாமா முடிவு எதனையும் எடுக்க வேண்டாம். குறிப்பாக வரவிருக்கும் அவரது பிறந்தநாள் ஏப்., 24 2012 மற்றும் 2013 மிக சிறப்பாக அமையும். இந்நாளில் அவர் மீண்டும் ஆற்றல் பெற்றவராக திகழ்வார்.  

பிறந்த தேதி ராசி தெரியுமா ? இவருக்கு வரும் பிறந்த நாளுடன் 39 வயதை தொடுகிறார். இந்த வயதை கூட்டுகையில் 3 எண் வருகிறது. இந்த 39 என்பது ( 3 + 9 = 12 , 1+2 = 3 ). இந்த 3 ம் எண் இவருக்கு முழு ராசியான எண் ஆகும். இந்த காலம் வரும் போது அவர் 102 சதம் அடிக்க வாய்ப்புள்ளது. 102 ஐ பொறுத்தவரை கூட்டினால் 1+0+2 =3 வருகிறது.
இவர் பிறந்த தேதியை பொறுத்தவரையில் , ஏப்., 24 , 1973, இந்த எண்களை பொறுத்தவரை 2+4 = 6. இந்த 6ம் எண் அவருக்கு ராசியான எண் ஆகும். இவரது டெஸ்ட் அறிமுகம் கடந்த நவ. 15 , 1989 ல் நிகழ்ந்தது, 15 என்பது 1 +5 = 6 . எனவே வரும் 2 பிறந்த நாள் கொண்டாடி முடிப்பதற்குள் சச்சின் 102 சதம் அடித்து சாதனை நிகழ்த்தி இருப்பார் என்றார் ஜோதிடர் உறுதியாக., !

ஜோதிடர் தாமோதரன் கடந்த தேர்தலின்போது கேரளாவில் உம்ன்சாண்டி முதல்வராக வருவார் , மம்தா. ஜெ., ஆகியோர் கரம் வலுப்பெறும் என்றும் கூறியிருந்தார். குறிப்பாக 2011 ல் இந்திய உலக கோப்பை பெறும் என்றும் கணித்து சொல்லியிருந்தார். இவை எல்லாம் பலித்ததது. சமீப காலமாக 2007 முதல் சச்சின் மற்றும் தோனி குறித்து பிளாகுகளில் எழுதி வருகிறார்.
இன்றைய முத்தரப்பு போட்டியில் சச்சின் 30 ரன்கள் ‌எடுத்த நிலையில் அவுட்டானார். கடந்த போட்டியில் 14 ரன் எடுத்தார்.

Friday, February 24, 2012

முக்கியமான விஞ்ஞானி ராஜினாமா




புதுடில்லி: இஸ்ரோவில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தியது தமக்கு பெரும் அவமானமாக கருதுவதாக கூறி இந்திய விண்வெளி ஆராய்ச்சி ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இஸ்ரோ மூலம் விற்கப்படும் எஸ்பாண்ட் அலைக்கற்றை தொடர்பான ஆண்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தம், இஸ்ரோ தலைவராக மாதவன் நாயர் இருந்தபோது ஏற்படுத்தப்பட்டது. இதில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக புகார்கள் வந்ததன. இதையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் தலையிட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்தார். இது தொடர்பாக பலக்ககட் விசாரணை நடந்து வருகிறது.

வின்வெளி ஆராய்ச்சி ஆணைய உறுப்பினரும் மூத்த விஞ்ஞானியுமான ரோதம் நரசிம்மா என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை பிரதமருக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
சமீபத்திய ஆண்ட்ரிக்ஸ் -தேவாஸ் ஒப்பந்தம் தொடர்பாக புகார் மற்றும் விசாரணை ஆகியன தமது மனதை மிகவும் புண்படுத்தியதாகவும், இது போன்ற முறைகேடு நடந்திருப்பதற்கான ஆதாரங்கள எதுவுமில்லை என்றும், சுய லாப நோக்கம் இருப்பதற்கான வாய்ப்பில்லை , விஞ்ஞானிகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைப்பவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயம் தமக்கு அவமானமாக இருப்பதால் இந்த

பதவியில் இருந்து விலகுவதாக நரசிம்மா கூறியுள்ளார். இவரது ராஜினாமா மாதவன் நாயருக்கு ஆதரவு தரும் வகையில்உள்ளது.

மிக முக்கியமான விஞ்ஞானி: நரசிம்மா விண்வெளி கொள்கைகள் வகுப்பதில் முக்கிய பங்காற்றியவர். பி.எஸ்.எல்.வி,. சந்திரயான் உள்ளிட்டவை உருவாக்குவதில் இவருக்கும் முழுப்பங்கு இருந்தது. விண்வெளி மையம் என்றால் ரோதம் நரசிம்மா ஒரு முக்கியஸ்தராக புகழ் பெற்ற பெரும் ஆற்றல் படைத்தவர் ஆவார்.